வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வவுனியா ரயில் தடம் புரண்டதால் தொடர்ந்தும் சேவைகள் பாதிப்பு..!

அநுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கடந்த 13ம்திகதி மாலை சாலியபுர பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, வவுனியா வரையிலான ரயில் சேவையை மேற்கொள்வதற்கு இன்னும் இரு தினங்களுக்கு மேல் செல்லுமென அநுராதபுரம் புகையிரத நிலைய அதிபர் தம்பிராசா செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். தற்சமயம் ரயில் தடம்புரண்ட பகுதியிலுள்ள ரயில் பாதையை திருத்தும் பணிகளில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து வரும் ரயில் சேவைகள் அனைத்தும் அநுராதபுரம் வரை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக