செவ்வாய், 6 ஏப்ரல், 2010

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன்வரவும் -ஜனாதிபதி அழைப்பு..!

எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரசாரத்திற்கு ஏமாறாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் கைகோர்த்துச் செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அம்பாந்தோட்டை மித்தெனியவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலகநாடுகள் வியப்படையும் வகையில் நாட்டின் சகல கிராமங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்லவதற்குத் தம்மால் முடிந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குகளை வீணே சிதைக்க வேண்டாமென ஜே.வி.பி.யினரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக