வெள்ளி, 30 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புலி சார்பில் எச்சரிக்கைத் துண்டுபிரசுரம்..!!

யாழ்ப்பாணத்தில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து துண்டுபபிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்பலகை எழுதுதல், சுற்றலாப் பயணிகளுக்கு வீடுவாடகைக்கு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு காணி விற்றல், தனியார் சிற்றூர்த்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கு தீர்வுகானுமாறு கோரியே இத்துண்டுபிரசுரம் விநியோகிகப்பட்டுள்ளது. தமிழ்பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்துக்குள் சிக்கியுள்ளோம் எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும் இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் அதியுச்ச தண்டணைகளை பெறுவீர்கள் எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள போதிலும் எம்முடன் ஒத்துழைத்து சிங்கள மயமாக்களில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக