சனி, 27 பிப்ரவரி, 2010

எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடரவே தேர்தலில் போட்டியிடுகிறேன்-விஜயகலா மகேஸ்வரன்..!

எனது கணவர் தி.மகேஸ்வரன் விட்டுச்சென்ற பணிகளைத் தொடரவே நான் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகிறேன். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய கட்சியிலேயே நாம் களமிறங்கியுள்ளோம். குடாநாட்டு மக்கள் எமது கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பாரியாரும் ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனது கணவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குறிப்பாக யாழ். குடாநாட்டு மக்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்து வந்தார். இதனால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை என்னை நிலைகுலையச் செய்த பொழுதிலும் அவர் விட்ட பணியை தொடர்வதற்காகவே இந்தத் தேர்தலில் நான் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது கணவரின் சேவைகள் தொடர்வதற்கு எனது அணிக்கு குடாநாட்டு மக்கள் ஆணை வழங்க வேண்டும் எமது அணியின் வெற்றி குடாநாட்டு மக்களின் வெற்றியாகும் என்றும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக