வியாழன், 22 ஜனவரி, 2015

எரிபொருட்களை அடுத்து பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை..!!

எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டமையை அடுத்து, தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களின் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளன.
தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கட்டணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டவணைகளின் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் தனியார் பயணிகள் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக