போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சிங்ஹா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.கொழும்பு வெலிக்கடை சிறைக்கு சென்று இந்திய உயர்ஸ்தானிகர் அவர்களை சந்தித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செய்யத் அக்பர்ருதீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இந்த மீனவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாக இந்திய அறிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி 2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் இந்த 5 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் மேலும் மூன்று இலங்கை பிரஜைகளுக்கு இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக