
கடந்த 31ம் திகதி மாகாண சபையில் நடைபெற்ற மேற்படி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கல் தொடர்பான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க, போதுமானளவு பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவைத்தலைவர் கூறியுள்ளார்.
எனினும் முன்னர் தீர்மானிக்கப்பட்டதைப்போன்று இன்று கொண்டுசென்று வழங்க முடியாதநிலை காணப்பட்டதாகவும், எனினும் அப்பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் வழங்குவதற்கும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் 31.10.2014 ம் திகதியன்று சபையின் உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாகாண சபையின் சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை 07.11.2014 ம் திகதி கொண்டுசென்று ஒப்படைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் தற்போதைய நிலவரப்படி போதியளவு பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக இருப்பதனால் குறித்த திகதியில் உதவிப் பொருட்களை கொண்டு செல்வது பிற்போடப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பொருட்களை அடுத்த வாரமளவில் கொண்டுசென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக