திங்கள், 20 அக்டோபர், 2014

தண்டவாளத்தை விட்டு விலகி யாழ்தேவி ரயில் தடம்புரண்டது..!!!!

நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த 13ம் திகதி தான் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ரயில் சேவை ஆரம்பித்து பத்து நாட்களுக்குள்ளாகவே யாழ்ப்பாணத்தில் புகையிரத வண்டியொன்று தடம் புரண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை ரயில் தடம்புரண்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான தபால் புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் ரயில் நிலையம் அருகில் ரயில் தடம்புரண்டுள்ளதுடன், புகையிரத திணைக்கள தொழில்நுட்பவியலாளர்கள் தற்போது அதனை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தபால் புகையிரதம் தடம் புரண்டுள்ளதன் காரணமாக யாழ். தேவி புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை என்றும் தெரியவருகின்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக