வியாழன், 31 ஜூலை, 2014

நாடுமுழுவதும் ஒரே இரவில் சுவரொட்டி ஒட்டியவர்கள் ரணிலை சந்தித்தனர்....!!!!

நாடு முழுவதும் அண்மையில் ஒரே இரவில் சுவரொட்டிகளை ஒட்டிய முதலாம் முன்னணி என்ற அரசியல் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கெலும் அமரசிங்க என்ற நபர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இந்த சந்திப்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் சந்திரசேன விஜேசிங்க மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.

கெலும் அமரசிங்க என்பவர் முன்னிலை சோசலிசக் கட்சியின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினராவார்.


இந்த குழுவினர் இதற்கு முன்னதாக மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக