செவ்வாய், 29 ஜூலை, 2014

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உறவுத் திட்டங்கள்....!!!

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை புதுப்பித்துக் கொள்ள இரண்டு நாடுகளும் இருதரப்பிலும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் பொருளாதார அமைச்சர் கசுயாசி அகாபா இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்த போது இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.

இதன்போது இரண்டு நாடுகளின் தரப்பிலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் ஜப்பானின் புதிய முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


இதேவேளை இலங்கையின் ஒலிபரப்பு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய அமைச்சர் உறுதியளித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக