செவ்வாய், 24 ஜூன், 2014

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை..!!!

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முஸ்லிம் மத அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் பாதுகாப்புச் செயாளலரை சந்தித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் அமைந்தாக முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பௌத்த சமூகங்களுக்கு இடையிலான நீண்ட கால உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக