
நாடு கடந்த தமிழீழ அரசை ஏற்குமாறு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்தே அவர் இதனைக் கூறியிருக்கிறார். பச்சை கட்சி உறுப்பினர் அமண்ட ப்றேச்ணன் , சமீபத்தில் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் கண்காணிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி இருந்தார். அவர் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்குமாறும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக