செவ்வாய், 11 மே, 2010

தலைமையில் திருப்தியின்மை காணப்பட்டால் ஐ.தே.கட்சி தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு..!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனது தலைமைத்துவம் தொடர்பில் திருப்தியின்மை காணப்பட்டால், தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையிட்டு, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி வருவதுடன், கட்சித் தலைமைத்துவத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இதேவேளை, கடந்த ஏப்ரல் 8ம்திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117ஆசங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 46ஆசங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக