
வடக்கின் யாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்த்துக்கொள்ளப்படடுள்ளதுடன் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. அதன்படி பயிற்சிக்காக 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டப் பயிற்சிக்கு எஞ்சியவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பயிற்சிகளின் பின்னர் இவர்கள் வடமாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர். வடபகுதியிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன. இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சியவயதையுடையவர்களும் , விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக