ஜெனரல் சரத்பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்புவைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தக நிலையமொன்றின் பணிப்பாளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிஸை மஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்தது. குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த 30ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக