
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் நியமிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ{க்கு கிடைத்துள்ள இரண்டு ஆசனங்களில் ஒன்று கிழக்கிலும் மற்றையது மேல்மாகாணத்திலும் சுழற்சி அடிப்படையில் பகிரப்படும் என தெரியவருகின்றது. தற்பொழுது களுத்துறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதிர்காலத்தில் கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கும் பகிரப்படும். இது சம்பந்தமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசனலி தெரிவிக்கையில், முதற்கட்டமாக கட்சியின் சிரேஷ்டத்துவம் மற்றும் கட்சிக்கு மிக நம்பிக்கைகுரியவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியின் உயர்பீடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமச் செய்ய வேண்டிக் கொள்ளும்போது தாங்கள் இருவரும் இராஜினாமச் செய்ய தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக