வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புலிகளின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது..!

புலிகளின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மலேசியத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம்முதல் இந்த ஆண்டு மார்ச்மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட சில வெளிநாட்டு முக்கியஸ்தர்களை பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மலேசிய பாதுகாப்பு பிரிவினரின் செயற்திறனை இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பாராட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது. 2008ம் ஆண்டுமுதல் இவ்வருடம் மார்ச் மாதம்வரையில் 599 வெளிநாட்டுப் பிரஜைகளை மலேசிய பொலிசார் கைதுசெய்துள்ளனர். தீவிரவாத நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம் என பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக