வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 3மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளதென ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமெரிக்க பிரதிநிதிகளின் ஊடாக இந்நிதி வழங்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக