இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கவில்லையென கூறப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் குறித்த 250அகதிகளும் பிடிபட்டதிலிருந்து கப்பலிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் தம்மை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் அல்லது இலங்கை தவிர்ந்த ஏனைய நாடொன்றுக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்து கப்பலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கப்பலிலுள்ள அகதியொருவர் நோயினால் பலியானமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து குறித்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தி இந்தோனேசியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்க அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கவில்லையென கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக