இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். அதற்கு பிரதேச செயலாளர் தடையாக உள்ளார். எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் கொடும்பாவியை எரிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போதும், சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திய சில நபர்களை அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த குழுவில் பலர் இறுதி நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மதியம் 1.30 மணியளவில் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். அதற்கு பிரதேச செயலாளர் தடையாக உள்ளார். எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பிரதேச செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரத்தின் கொடும்பாவியை எரிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போதும், சமூக சேவகர்கள் என தங்களை அடையாளப்படுத்திய சில நபர்களை அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த குழுவில் பலர் இறுதி நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக