வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

சந்திரிகா கைவசமுள்ள 10 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்படும் அமைச்சர் குணவர்தன..!!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் இன்னும் 10 அமைச்சுக்கள் கைவசம் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தகுதியானவர்களுக்கு அதனை எதிர்வரும் நாட்களில் வழங்கவுள்ளதாகவும் காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காத சகல உள்ளுராட்சி நிறுவனங்களையும் ஆணையாளரின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக