ஞாயிறு, 6 ஜூலை, 2014

வவுனியாவில் சிறப்புற நடைபெற்ற பண்டாரவன்னியன் நாடக விழா!



போர்வாளை தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, புலியெனப் பாய்ந்து, முல்லைத்தீவில் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்த பிரமாண்டமான கோட்டையை நிர்மூலமாக்கி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்து, இறக்கும் வரை வன்னி பெருநிலப்பரப்பை அந்நிய சக்திகளிடம் வீழ்ச்சியுறாமல் அரசாண்ட, இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆவான்.

அந்த தீரனின் அஞ்சா நெஞ்ச வாழ்க்கையை கூறும் வரலாற்று நாடகம் இன்று 06.07.2014  வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினரும், 'வன்னி குறோஸ்' சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி  சி.சிவமோகனின் தலைமையில் நடைபெற்றது.

 மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பான நிகழ்வு, தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றது. பின்னர்   வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி  சி.சிவமோகனின் தலைமை உரை இடம்பெற்றது.


அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து
 பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பாக கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து  தேசிய தலைவன் மாவீரன்  பண்டாரவன்னியன் எனும் தலைப்பில்  கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களின் கவி வரிகள்  இடம்பெற்றது .அதனை தொடர்ந்து  என். எஸ் .மணியம் அவர்களின் தயாரிப்பில்   வன்னி கலைஞர்களினால்   பண்டரவன்னியனின்  வீர வரலாற்று நாடக விழா அரங்கேறியது.


பண்டாரவன்னியன் நாடகத்தின் மதிப்புரையை பார்த்திபன் அவர்கள் வழங்கினார். பண்டாரவன்னியன் நாடகத்தை அரங்கேற்றம் செய்த கலைஞர்கள் பொன்னாடை போர்த்து கௌரவிக்கபட்டார்கள்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், , ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர், வவுனியா தமிழ் மத்திய கல்லூரியின் அதிபர் ம.ச.பத்மநாதன்,கலாநிதி தமிழ்மணி அகளங்கன்,வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன்,வரலாற்று ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக