வியாழன், 21 அக்டோபர், 2010

இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23ம்ஆண்டு நினைவுதினம்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987ம்ஆண்டு அக்ரோபர் 21ம், 22ம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23ம்ஆண்டு நினைவுதினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப்படங்களுக்கு சுடர்ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர்களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்நினைவு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இப்படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்திய அதிகாரிகளான அ.சிவபாதசுந்தரம், கே.பரிமேலழகர், கே.கணேசரத்தினம் ஆகியோர் உட்பட 21 பணியாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக