வியாழன், 6 மே, 2010

வேலுப்பிள்ளை பிரபாகரன், இறப்பதற்கு முன் வாழ்ந்த வீட்டை ஒருவர் உரிமை கோரியுள்ளார் - இராணுவத் தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இறப்பதற்கு முன் வாழ்ந்த வீட்டை ஒருவர் உரிமை கோரியுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரே இவ்வீட்டின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எட்டு வருடங்களுக்கு முன் அவ்விட்டை விடுதலைப்புலிகள் இவரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வீடு ஒரு ஏக்கர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஒரு காலத்தில் இவ்வீடு அமைந்திருந்த பகுதி விடுதலைப் புலிகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக