செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

புளொட் சிரேஸ்ட உறுப்பினர் விஜயன் அவர்களின் இறுதி நிகழ்வுகள்..!

வவுனியா கோவில்புதுக்குளத்தில் நேற்றுக்காலை சுகயீனம் காரணமாக மரணமான புளொட் உறுப்பினரான தோழர் கந்தசாமி மயில்வாகனம் (விஜயன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. அன்னாரின் பூதவுடல் கோவில்புதுக்குளம் இல்லத்தில் இன்றையதினம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது புளொட் முக்கியஸ்தர்கள், புளொட் உறுப்பினர்கள், புளொட் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து இன்றுபிற்பகல் 2மணியளவில் அன்னாரின் பூதவுடல் கோயில்குளம் இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகளின் பின்னர் பிற்பகல் 2.30மணியளவில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளில் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜீ.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் மற்றும் புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக