புதன், 3 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட பலர் முன்வருகை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு பலர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 20விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலபேர் விண்ணப்பித்திருந்த போதிலும் விண்ணப்பங்கள் பரிசிலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மாத்திரமே வாய்ப்புக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சென்ற தடவை நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட பலபேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் தமிழ் ஆர்வலர்களும் சமூக சேவையாளர்களும் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக