செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஈ.பி.டி.பி. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி தலைவர் என்ற ரீதியிலேயே யாழ்ப்பாண மக்கள் தம்மை அறிந்து வைத்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிடுவது பொருத்தமாக அமையாது எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதனால் தமது வாக்கு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை எனவும், தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக