வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் 2,644,200 டொலர் பெறுமதியான கல்வனைஸ் கூரைத் தகடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதற் தொகுதி இன்று கையளிக்கப்படவுள்ளது.
இன்று காலை இவ்வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவிடம் தகடுகளைக் கையளிக்கவுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.
இன்றைய இவ்வைபவத்தின் போது 500 மெற்றிக்தொன் கல்வனைஸ் தகடுகளைக் கொண்ட 19 கொள்கலன்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து பசில் ராஜபக்ஷ எம்.பி. பெற்றுக்கொள்ளவுள்ளார். இதன் பெறுமதி 50,8347.45 அமெரிக்க டொலராகுமென மேற்படி அமைச்சு தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக