சனி, 30 ஜனவரி, 2010
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்யநடவடிக்கை..!
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்த நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைவார் என்ற நம்பிக்கையில் குறித்த நபர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது இவ்வாறான நபர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக