ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்துடனே சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு -ஜனாதிபதி தெரிவிப்பு..!!

எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வுள்ளதாகவும் எனினும் அத்தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்ட போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் இந்நிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13வது அரசியலமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ்தரப்பு கோருகிறது இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக