சனி, 30 ஜனவரி, 2010

சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் 13பேர் கைது..!!

நேற்று மாலை கொழும்பு ராஜகிரிய மாவத்தையில் உள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தை சி.ஐ.டியினர் சோதனைக்கு உள்ளாக்கினர் இச்சோதனை நடவடிக்கைகளின் போது அந்த அலுவலகத்தில் இருந்த 13பேரை சிஐடியினர் கைதுசெய்துள்ளனர் இந்த 13பேரும் முன்னாள் படைவீரர்கள் எனவும் போரின் போது இராணுவத்தை விட்டு தப்பியோடியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வலுவலகம் பொலிஸாரால் உடைக்கப்பட்டே சோதனை செய்யப்பட்டதாகவும் அறிய வருகிறது. மேலும் சரத் பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்த சில கணணிகள் மற்றும் சிடிக்கள் என்பனவும் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டு மேலதிக சோதனைக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை ஒருங்கிணைப்பாளர் சிரால் லக்திலக கூறினால் இச்சோதனை நடந்தபோது அங்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய அல்லது பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வுபெற்ற சுமார் 35பேர் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக